ஹதீஸ்கள்
#5197
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகை) தொழுதார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் தொழுதார்கள். அத்தொழுகையில் ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயம் ஓதுமளவுக்கு வெகுநேரம் நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் (குனிந்து) ‘ருகூஉ’ செய்தார்கள். பின்பு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்து (நிலைக்கு வந்து) நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து, முதலாவது நிலையைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த இரண்டாம் ருகூஉவான)து, முதலாம் ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்தார்கள். பிறகு ‘சஜ்தா’ (சிரவணக்கம்) செய்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து) எழுந்து (நிலையில்) நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து, முந்தைய நிலையைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த ‘ருகூஉ’வான)து, முந்தைய ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பின்னர் (‘ருகூஉ’விலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முந்தைய நிலையைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ‘ருகூஉ’ செய்தார்கள். இ(ந்த ‘ருகூஉ’வான)து முந்தைய ‘ருகூஉ’வைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (‘ருகூஉ’விலிருந்து) நிமிர்ந்தார்கள். பின்னர் ‘சஜ்தா’ செய்தார்கள். பிறகு, (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்துவிட்டிருந்த நிலையில் தொழுது முடித்தார்கள். பிறகு, ‘‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவரது இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, இ(த்தகைய கிரகணத்)தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டி ருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (தொழுதுகொண்டிருக்கையில்) ‘சொர்க்கத் தைக் கண்டேன்’ அல்லது ‘சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது’. அதிலிருந்து (பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்(த பழத்திலிருந்)து புசித்திருப்பீர்கள். மேலும், நான் (தொழுதுகொண்டி ருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘ஏன் (அது?) அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பெண்களின் நிராகரிப்பே காரணம்” என்றார்கள். அப்போது ‘‘பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கி றார்கள்?” என வினவப்பட்டது. அதற்கு ‘‘கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க் கிறார்கள். (கணவன் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் ‘உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” எனப் பதிலளித்தார்கள்.132 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5197
- Book Index
- 131
Grades
- -