ஹதீஸ்கள்
#5196
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர் களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப் பட்டோர் ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர். இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا اسماعيل، اخبرنا التيمي، عن ابي عثمان، عن اسامة، عن النبي صلى الله عليه وسلم قال " قمت على باب الجنة فكان عامة من دخلها المساكين، واصحاب الجد محبوسون، غير ان اصحاب النار قد امر بهم الى النار، وقمت على باب النار فاذا عامة من دخلها النساء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5196
- Book Index
- 130
Grades
- -
