ஹதீஸ்கள்
#5155
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத் தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு வளம் வழங்குவானாக!” (பாரக்கல்லாஹ’ ல(க்)க) என்று பிரார்த்தித்து விட்டு, ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்!” என்று சொன்னார்கள்.94 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد هو ابن زيد عن ثابت، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم راى على عبد الرحمن بن عوف اثر صفرة قال " ما هذا ". قال اني تزوجت امراة على وزن نواة من ذهب. قال " بارك الله لك، اولم ولو بشاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5155
- Book Index
- 90
Grades
- -
