ஹதீஸ்கள்
#5132
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து தம்மை மணந்துகொள்ளுமாறு கோரினார். அவளைவிட்டுத் தமது பார்வையைத் தாழ்த்திக்கொண்ட நபி (ஸல்) அவர்கள், பிறகு பார்வையை உயர்த்தினார்கள். ஆனால், அந்தப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் (மணந்துகொள்ள) விரும்ப வில்லை. அப்போது, நபியவர்களின் தோழர் களில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண்ணை எனக்கு மண முடித்து வையுங்கள்!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மஹ்ராகச் செலுத்த) உன்னிடம் (பொருள்) ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘என்னிடம் ஏதும் இல்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பால் ஆன மோதிரம்கூட இல்லையா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘(இரும்பு) மோதிரம் கூட இல்லை. ஆயினும், (நான் கீழாடை யாக உடுத்திக்கொள்ளும்) என்னுடைய இந்தப் போர்வையை இரண்டாகக் கிழித்து அவளுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டு மீதிப் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! குர்ஆனில் ஏதேனும் (உமக்கு மனனம்) உண்டா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியானால்) நீர் செல்லலாம்! உம்மிடம் (மனப்பாடமாக) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துவைத்தேன்” என்றார்கள்.74 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5132
- Book Index
- 68
Grades
- -