ஹதீஸ்கள்
#5131
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்குமாறு உம்மிடம் அவர்கள் கோருகின்றார்கள். நீர் கூறுவீராக: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்...” எனும் (4:127ஆவது) இறைவசனம், ஓர் அநாதைப் பெண்ணைக் குறிக்கிறது. அவள் ஒரு மனிதரின் பாதுகாப்பில், அவரது சொத்தில் பங்காளியாக இருந்துவருவாள். இந்நிலையில், அவளைத் (தாமே மணந்துகொள்ள விரும்பினாலும், அவளுடன் அவர் முறையாக இல்லறம் நடத்தமாட்டார். அல்லது) தாமும் மணந்துகொள்வதை விரும்பமாட்டார். பிறருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து தமது சொத்தில் அவர் தலையிடுவதையும் விரும்பமாட்டார். (இவ்வாறு) தம்மிடம் அவளை முடக்கி வைத்துக்கொள்வார். ஆனால், அல்லாஹ் இதற்குத் தடை விதித்தான்.73 அத்தியாயம் :
حدثنا ابن سلام، اخبرنا ابو معاوية، حدثنا هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها في قوله {ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن} الى اخر الاية، قالت هي اليتيمة تكون في حجر الرجل، قد شركته في ماله، فيرغب عنها ان يتزوجها، ويكره ان يزوجها غيره، فيدخل عليه في ماله، فيحبسها، فنهاهم الله عن ذلك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5131
- Book Index
- 67
Grades
- -
