ஹதீஸ்கள்
#5130
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது: அந்த (2:232ஆவது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரியை ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். அவளுடைய ‘இத்தா’ காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், ‘‘நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச்செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளைப் பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்” என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போது தான் அல்லாஹ், ‘‘...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்” எனும் இந்த (2:232ஆவது) வசனத்தை அருளினான். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்துவைத்தேன்.70 அத்தியாயம் :
حدثنا احمد بن ابي عمرو، قال حدثني ابي قال، حدثني ابراهيم، عن يونس، عن الحسن، {فلا تعضلوهن} قال حدثني معقل بن يسار، انها نزلت فيه قال زوجت اختا لي من رجل فطلقها، حتى اذا انقضت عدتها جاء يخطبها، فقلت له زوجتك وفرشتك واكرمتك، فطلقتها، ثم جيت تخطبها، لا والله لا تعود اليك ابدا، وكان رجلا لا باس به وكانت المراة تريد ان ترجع اليه فانزل الله هذه الاية {فلا تعضلوهن} فقلت الان افعل يا رسول الله. قال فزوجها اياه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5130
- Book Index
- 66
Grades
- -
