ஹதீஸ்கள்
#5124
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(‘இத்தா’வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை” எனும் (2:235ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஒருவர், (‘இத்தா’விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) ‘நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றோ ‘ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்’ என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்.” என்று சொன்னார்கள். காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நீ என்னிடம் மதிப்புக் குரியவள்; நான் உன்னை விரும்புகிறேன்; அல்லாஹ் உனக்கு நன்மை புரிவான் என்பன போன்ற வார்த்தைகளைக் கூறுவதாகும். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இத்தாவில் இருக்கும் பெண்ணிடம் தம் திருமண விருப்பத்தை) ஒருவர் மறைமுகமாகச் சொல்ல வேண்டும்; வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. (உதாரணமாக) ‘எனக்கு ஒரு தேவை உள்ளது’ என்றோ, அல்லது ‘ஒரு மகிழ்ச்சியான செய்தி உனக்கு (காத்திருக்கிறது)’ என்றோ, ‘அல்லாஹ்வின் அருளால் நீ கடைத்தேறிவிடுவாய்’ என்றோ கூறுவார். அதற்கு (பதிலாக) அவள், ‘நீங்கள் சொல்வதை நான் செவியுற்றேன்’ என்று மட்டும் சொல்வாள். அவனுக்கு எந்த வாக்குறுதியையும் அவள் அளிக்கக் கூடாது. (இதைப் போன்றே) அவளுடைய காப்பாளரும் அவளுக்குத் தெரியாமல் (யாருக்கும்) வாக்குக் கொடுக்கக் கூடாது. ‘இத்தா’ காலத்தில் வைத்தே ஒரு பெண் ஒரு மனிதருக்கு (மணமுடிக்க) வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு (வாக்குக் கொடுத்தபடி) இருவரும் மணந்துகொண்டால் இருவருக்கு மத்தியில் மணமுறிவு ஏற்படுத்தப்படாது. ‘‘(2:235ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஸ்ஸிர்ரு’ (இரகசியம்) எனும் சொல்லுக்கு ‘விபசாரம்’ என்பது பொருள்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ஹத்தா யப்லுஃகல் கிதாபு அஜலஹு (குறித்த தவணை முடிகின்றவரை) என்பது ‘இத்தா’ முடிவதைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
وقال لي طلق حدثنا زايدة، عن منصور، عن مجاهد، عن ابن عباس، {فيما عرضتم} يقول اني اريد التزويج، ولوددت انه تيسر لي امراة صالحة. وقال القاسم يقول انك على كريمة، واني فيك لراغب، وان الله لسايق اليك خيرا. او نحو هذا. وقال عطاء يعرض ولا يبوح يقول ان لي حاجة وابشري، وانت بحمد الله نافقة. وتقول هي قد اسمع ما تقول. ولا تعد شييا ولا يواعد وليها بغير علمها، وان واعدت رجلا في عدتها ثم نكحها بعد لم يفرق بينهما. وقال الحسن {لا تواعدوهن سرا} الزنا. ويذكر عن ابن عباس {الكتاب اجله} تنقضي العدة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5124
- Book Index
- 60
Grades
- -
