ஹதீஸ்கள்
#5121
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘‘இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘என்னிடம் ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு!” என்று சொன்னார்கள். அவர் போய் (தேடிப்பார்த்து)விட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை; இரும்பாலான மோதிரம்கூட கிடைக்க வில்லை. ஆனால், இதோ எனது இந்த கீழங்கி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்)” என்றார். - அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை. (அதனால்தான், கீழங்கியில் பாதியைத் தருவதாகச் சொன்னார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக் கொண்டால் அவள்மீது (அதில்) ஏதும் இருக்காது; அதை அவள் உடுத்திக் கொண்டால் அதில் உம்மீது ஏதும் இருக்காது. (உமது கீழங்கியைக் கொடுத்து விட்டு என்ன செய்யப்போகிறாய்?)” என்று சொன்னார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் செல்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘அவரை அழைத்தார்கள்’. அல்லது ‘அவர் அழைக்கப்பட்டார்’. (அவர் வந்தவுடன்) அவரிடம், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நபியவர்களிடம், ‘‘(குர்ஆனில்) இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் (மனப்பாடமாக) உள்ளது” என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு மனப்பாடமாகத் தெரிந்துள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.61 அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، حدثنا ابو غسان، قال حدثني ابو حازم، عن سهل، ان امراة، عرضت نفسها على النبي صلى الله عليه وسلم فقال له رجل يا رسول الله زوجنيها. فقال " ما عندك ". قال ما عندي شىء. قال " اذهب فالتمس ولو خاتما من حديد ". فذهب ثم رجع فقال لا والله ما وجدت شييا، ولا خاتما من حديد، ولكن هذا ازاري ولها نصفه قال سهل وما له رداء. فقال النبي صلى الله عليه وسلم " وما تصنع بازارك ان لبسته لم يكن عليها منه شىء، وان لبسته لم يكن عليك منه شىء ". فجلس الرجل حتى اذا طال مجلسه قام فراه النبي صلى الله عليه وسلم فدعاه او دعي له فقال " ماذا معك من القران ". فقال معي سورة كذا وسورة كذا لسور يعددها. فقال النبي صلى الله عليه وسلم " املكناكها بما معك من القران
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5121
- Book Index
- 57
Grades
- -
