ஹதீஸ்கள்
#5119
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணைமுறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்தபட்சம்) மூன்று நாட்களாவது இல்லறம் நடத்திட வேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள்ள அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக்கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்து விடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த(த் தவணைமுறை)த் திருமணம் (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டும் (நெருக்கடி நிலையில்) அனுமதிக்கப்பட்டதா? அல்லது மக்கள் அனைவருக்கும் உள்ள பொது அனுமதியா என்பது எனக்குத் தெரியவில்லை.60 அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்: இத்திருமணத்திற்கான அனுமதி விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5119
- Book Index
- 55
Grades
- -