ஹதீஸ்கள்
#5113
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண் களில் கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஒரு பெண் தம்மைத்தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் ‘‘(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம்” எனும் (33:51ஆவது) வசனம் இறங்கியபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களது விருப்பத்தைத் தங்களுடைய இறைவன் விரைவாக பூர்த்திசெய்வதையே நான் காண்கிறேன்” என்று (நபியவர்களிடம்) கூறினேன்.55 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் சற்று கூடுதல் குறைவுடன் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، حدثنا ابن فضيل، حدثنا هشام، عن ابيه، قال كانت خولة بنت حكيم من اللايي وهبن انفسهن للنبي صلى الله عليه وسلم فقالت عايشة اما تستحي المراة ان تهب نفسها للرجل فلما نزلت {ترجي من تشاء منهن} قلت يا رسول الله ما ارى ربك الا يسارع في هواك. رواه ابو سعيد المودب ومحمد بن بشر وعبدة عن هشام عن ابيه عن عايشة يزيد بعضهم على بعض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5113
- Book Index
- 50
Grades
- -
