ஹதீஸ்கள்
#5097
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையாயிருந்து விடுதலைபெற்ற) பரீராவினால் மூன்று வழிமுறைகள் (நமக்கு) கிட்டின: 1. அவர் விடுதலை அடைந்தபோது (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.30 2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘விடுதலை செய்தவருக்கே அடிமையின் வாரிசுரிமை கிட்டும்” என்றார்கள். 3. நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிóருந்த குழம்பும் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், ‘‘நான் (நெருப்பின்மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்கு, ‘‘அது பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி. தர்மப் பொருளைத் தாங்கள் உண்ணமாட்டீர்களே?” என்று சொல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பரீராவிற்குத்தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு!” எனறு சொன்னார்கள்.31 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5097
- Book Index
- 35
Grades
- -