ஹதீஸ்கள்
#5092
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால்...” எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்துவருகின்ற அநாதைப் பெண் ஆவாள். அப்பால் அவளது அழகையும் செல்வத்தையும் கண்டு ஆசைப்பட்டு (காப்பாளரான) அவர் (அவளை மணமுடித்துக்கொள்ள) விரும்புகிறார். (ஆனால்) அவளுக்குரிய (தகுதியான) மணக்கொடையை (மஹ்ரை)க் குறைத்துவிட விரும்புகிறார். இத்தகைய பெண்களுக்கு உரிய மஹ்ரை நிறைவாகச் செலுத்தும் விஷயத்தில் நீதி தவறாது நடந்துகொண்டால் தவிர, அவர்களை மணந்துகொள்ளக் கூடாது என்று (காப்பாளர்களுக்கு இவ்வசனத்தின் மூலம்) தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்தப் பெண்கள் அல்லாத (மனதுக்குப் பிடித்த) இதரப் பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படியும் கட்டளையிடப்பட்டது. இதற்குப் பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் அப்போது, ‘‘பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான். அதாவது ‘‘ஓர் அநாதைப் பெண் அழகும் செல்வமும் உள்ளவளாக இருந்தால் நிறைவான மஹ்ரை (மணக்கொடையை) அளித்து அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்ளவும் காப்பாளர்கள் விரும்புகின்றனர். (அதே சமயம்) அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் விரும்பத் தகாதவளாக இருப்பின், அவளை விட்டுவிட்டு வேறு பெண்களைப் பிடித்துக்கொள்கின்றனர்’ என்று அல்லாஹ் அவர்களுக்கு அருளினான். ‘‘அவர்கள் அப்பெண்ணை விரும்பாத நேரம் (மணந்துகொள்ளாமல்) விட்டு விடுவதுபோல், அவளை விரும்பும் நேரம் மஹ்ர் விஷயத்தில் அவளது உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டாலே ஒழிய அவளை மணந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று இவ் வசனத்தின் மூலம் இறைவன் தெரிவித் தான்.28 அத்தியாயம் :
حدثني يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني عروة، انه سال عايشة رضى الله عنها {وان خفتم ان لا تقسطوا في اليتامى} قالت يا ابن اختي هذه اليتيمة تكون في حجر وليها فيرغب في جمالها ومالها، ويريد ان ينتقص صداقها، فنهوا عن نكاحهن الا ان يقسطوا في اكمال الصداق، وامروا بنكاح من سواهن، قالت واستفتى الناس رسول الله صلى الله عليه وسلم بعد ذلك، فانزل الله {ويستفتونك في النساء} الى {وترغبون ان تنكحوهن} فانزل الله لهم ان اليتيمة اذا كانت ذات جمال ومال رغبوا في نكاحها ونسبها في اكمال الصداق، واذا كانت مرغوبة عنها في قلة المال والجمال تركوها واخذوا غيرها من النساء، قالت فكما يتركونها حين يرغبون عنها فليس لهم ان ينكحوها اذا رغبوا فيها الا ان يقسطوا لها ويعطوها حقها الاوفى في الصداق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5092
- Book Index
- 30
Grades
- -
