ஹதீஸ்கள்
#5091
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘‘இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார் கள். தோழர்கள், ‘‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?”என்று கேட்டார்கள். தோழர்கள், ‘‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن حمزة، حدثنا ابن ابي حازم، عن ابيه، عن سهل، قال مر رجل على رسول الله صلى الله عليه وسلم فقال " ما تقولون في هذا ". قالوا حري ان خطب ان ينكح، وان شفع ان يشفع، وان قال ان يستمع. قال ثم سكت فمر رجل من فقراء المسلمين فقال " ما تقولون في هذا ". قالوا حري ان خطب ان لا ينكح وان شفع ان لا يشفع، وان قال ان لا يستمع. فقال رسول الله صلى الله عليه وسلم " هذا خير من ملء الارض مثل هذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5091
- Book Index
- 29
Grades
- -
