ஹதீஸ்கள்
#5085
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் ‘ஸஃபிய்யா பின்த் ஹுயை’ அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் மணவிருந்துக்கு (வலீமா) முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது விரிக்கப்பட்டபோது) அதில் பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள் (‘ஹைஸ்’ எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது). இதுவே நபி (ஸல்) அவர்களின் மணவிருந்தாக (வலீமா) அமைந்தது. அப்போது முஸ்லிம்கள், ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர் களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?” என்று பேசிக்கொண்டனர். அப்போது ‘‘ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஹிஜாப்’ -திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளை’)ட்டால், அவர் இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையரில் (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்) ஒருவர்; அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை யமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்தபிறகு) ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு இழுத்து (மூடி)விட்டார்கள்.21 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا اسماعيل بن جعفر، عن حميد، عن انس رضى الله عنه قال اقام النبي صلى الله عليه وسلم بين خيبر والمدينة ثلاثا يبنى عليه بصفية بنت حيى فدعوت المسلمين الى وليمته فما كان فيها من خبز ولا لحم، امر بالانطاع فالقى فيها من التمر والاقط والسمن فكانت وليمته، فقال المسلمون احدى امهات المومنين او مما ملكت يمينه، فقالوا ان حجبها فهى من امهات المومنين، وان لم يحجبها فهى مما ملكت يمينه، فلما ارتحل وطى لها خلفه ومد الحجاب بينها وبين الناس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5085
- Book Index
- 23
Grades
- -
