ஹதீஸ்கள்
#5083
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதரிடம் அடிமை(பணி)ப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்பித்து, அதையும் நன்கு கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதையும் அழகுற (நளினமாகக்) கற்பித்து, பிறகு அவளை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலையும் செய்து, திருமணமும் செய்துகொண்டால் அவருக்கு (விடுதலை செய்தது மற்றும் மணந்துகொண்டதற்காக) இரு நற்பலன்கள் கிடைக்கும். வேதக்காரர்களில் உள்ள ஒரு மனிதர் தம்முடைய (சமூகத்திற்கு நியமிக்கப் பட்டிருந்த) இறைத்தூதரையும் நம்பிக்கை கொண்டு என்னையும் (இறைத்தூதரென) நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை தன் உரிமையாள ருக்குச் செய்ய வேண்டிய கடமையையும் தன் இறைவனின் கடமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவாராயின் அவருக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சாலிஹ் பின் சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (இந்த நபிமொழியை எனக்கு அறிவித்த) ‘அபீ (ரஹ்) அவர்கள், ‘‘பிரதிபலன் ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இவற்றைப் பெற்றுக்கொள் ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவெல்லாம் சிலர் மதீனாவரை பயணம் சென்றதுண்டு” என்றார்கள். மற்றோர் அறிவிப்பில் (அடிமைப் பெண்ணின் எசமான் குறித்து), ‘‘அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மணக்கொடையும் கொடுத்(து மணமுடித்)தால் (...இரு நற்பலன்கள் உண்டு)” என்று காணப்படுகிறது.19 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد، حدثنا صالح بن صالح الهمداني، حدثنا الشعبي، قال حدثني ابو بردة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " ايما رجل كانت عنده وليدة فعلمها فاحسن تعليمها، وادبها فاحسن تاديبها، ثم اعتقها وتزوجها فله اجران، وايما رجل من اهل الكتاب امن بنبيه وامن بي فله اجران، وايما مملوك ادى حق مواليه وحق ربه فله اجران ". قال الشعبي خذها بغير شىء قد كان الرجل يرحل فيما دونه الى المدينة. وقال ابو بكر عن ابي حصين عن ابي بردة عن ابيه عن النبي صلى الله عليه وسلم " اعتقها ثم اصدقها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5083
- Book Index
- 21
Grades
- -
