ஹதீஸ்கள்
#5080
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாட்களுக்குப்பின்) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘யாரை மணமுடித்தாய்?” என்று கேட்டார்கள். நான் ‘‘கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?” என்று கேட்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியுற்றேன் என்று கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக் கலாமே!” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا محارب، قال سمعت جابر بن عبد الله، رضى الله عنهما يقول تزوجت فقال لي رسول الله صلى الله عليه وسلم " ما تزوجت ". فقلت تزوجت ثيبا. فقال " ما لك وللعذارى ولعابها ". فذكرت ذلك لعمرو بن دينار فقال عمرو سمعت جابر بن عبد الله يقول قال لي رسول الله صلى الله عليه وسلم " هلا جارية تلاعبها وتلاعبك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5080
- Book Index
- 18
Grades
- -
