ஹதீஸ்கள்
#5072
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (புலம்பெயர்ந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் சஅத் பின் ரபீஉ அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த சஅத் பின் ரபீஉ அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கு இரு துணைவியர் இருந்தனர். ஆகவே சஅத் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் வளத்தை அருள்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு, ‘‘என்ன இது அப்துர் ரஹ்மானே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளுக்கு (மணக்கொடையாக) என்ன கொடுத்தாய்?” என்று கேட்க, ‘‘ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஓர் ஆட்டை யாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக!” என்று சொன்னார்கள்.13 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، عن سفيان، عن حميد الطويل، قال سمعت انس بن مالك، قال قدم عبد الرحمن بن عوف فاخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الانصاري وعند الانصاري امراتان، فعرض عليه ان يناصفه اهله وماله فقال بارك الله لك في اهلك ومالك دلوني على السوق، فاتى السوق فربح شييا من اقط وشييا من سمن فراه النبي صلى الله عليه وسلم بعد ايام وعليه وضر من صفرة فقال " مهيم يا عبد الرحمن ". فقال تزوجت انصارية. قال " فما سقت ". قال وزن نواة من ذهب. قال " اولم ولو بشاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5072
- Book Index
- 10
Grades
- -
