ஹதீஸ்கள்
#5051
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (கூஃபா நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு மனிதர் (தொழுகையில், அல்லது நாளொன்றுக்கு) குர்ஆனிலிருந்து (குறைந்தது) எவ்வளவு ஓதினால் போதும் என்று நான் ஆய்வு செய்தபோது, மூன்று வசனங்களைவிடக் குறைவான (வசனங் களைக் கொண்ட) ஓர் அத்தியாயத்தை நான் காணவில்லை; அதனால் மூன்று வசனங்களுக்குக் குறைவாக ஒருவர் ஓதுவது முறையாகாது என்ற முடிவுக்கு வந்தேன்” என்று கூறினார்கள். அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது, அன்னாரை நான் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘‘யார் ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அவ்விரண்டுமே போதும்” என்ற நபிமொழியைக் கூறினார்கள்.64 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5051
- Book Index
- 75
Grades
- -