ஹதீஸ்கள்
#5022
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்களா?” என்று கேட்டேன். அன்னார் ‘இல்லை’ என்றார்கள். நான் ‘‘அப்படியானால் இறுதி விருப்பம் தெரிவிப்பது மக்கள்மீது எப்படிக் கடமையாக்கப்பட்டது? நபியவர்கள் இறுதி விருப்பம் தெரிவிக்காமலேயே மக்களுக்கு அந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதா?” என்று வினவினேன். அன்னார், ‘‘இறைவேதத்தின்படி செயல்படுமாறு நபியவர்கள் அறிவுரை கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.45 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا مالك بن مغول، حدثنا طلحة، قال سالت عبد الله بن ابي اوفى اوصى النبي صلى الله عليه وسلم فقال لا. فقلت كيف كتب على الناس الوصية، امروا بها ولم يوص قال اوصى بكتاب الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5022
- Book Index
- 44
Grades
- -
