ஹதீஸ்கள்
#5015
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். அதைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ‘‘எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,’அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர் (முர்சல்) - முறிவுற்றதாகும். ளஹ்ஹாக் அல்மஷ்ரிகீ (ரஹ்) அவர்கள் வழியாக வந்துள்ள மற்றொரு தொடரே முழுமை பெற்றதாகும் (முஸ்னத்) என அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5015
- Book Index
- 37
Grades
- -