ஹதீஸ்கள்
#5006
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
அபூசயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்தபிறகு), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுதுகொண்டிருந்தேன். (அதனால்தான் உடனடியாகத் தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ், ‘(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுக்கும் உங்களை அழைக்கும்போது இத்தூதருக்கும் பதிலளியுங்கள்’ என்று (8:24ஆவது வசனத்தில்) சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு, ‘‘நீங்கள் பள்ளிவாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத்தர வேண்டாமா?” என்று வினவியபடி எனது கையைப் பிடித்தார்கள். நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேற முற்பட்டபோது நான் (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்தியதோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா என்று கேட்டீர்களே!” என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அது) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பெற்றுள்ள மேன்மைமிகு குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள்.31 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا يحيى بن سعيد، حدثنا شعبة، قال حدثني خبيب بن عبد الرحمن، عن حفص بن عاصم، عن ابي سعيد بن المعلى، قال كنت اصلي فدعاني النبي صلى الله عليه وسلم فلم اجبه قلت يا رسول الله اني كنت اصلي. قال " الم يقل الله {استجيبوا لله وللرسول اذا دعاكم} ثم قال الا اعلمك اعظم سورة في القران قبل ان تخرج من المسجد ". فاخذ بيدي فلما اردنا ان نخرج قلت يا رسول الله انك قلت لاعلمنك اعظم سورة من القران. قال "{الحمد لله رب العالمين} هي السبع المثاني والقران العظيم الذي اوتيته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5006
- Book Index
- 28
Grades
- -
