ஹதீஸ்கள்
#5001
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Qur'an
அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்துகொண்டிருந் தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ‘யூசுஃப்’ எனும் (12ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒரு மனிதர் (அதை ஆட்சேபிக்கும் விதமாக), ‘‘இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்பெறவில்லை” என்று கூறினார். இப்னு மஸ்உத் (ரலி) அவர்கள், ‘‘(இவ்வாறு தான்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். ‘‘மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை நிறைவேற்றும்படி செய்தார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن كثير، اخبرنا سفيان، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، قال كنا بحمص فقرا ابن مسعود سورة يوسف، فقال رجل ما هكذا انزلت قال قرات على رسول الله صلى الله عليه وسلم فقال احسنت. ووجد منه ريح الخمر فقال اتجمع ان تكذب بكتاب الله وتشرب الخمر. فضربه الحد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Qur'an
- Hadith Index
- #5001
- Book Index
- 23
Grades
- -
