ஹதீஸ்கள்
#4960
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا حسان بن حسان، حدثنا همام، عن قتادة، عن انس رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لابى " ان الله امرني ان اقرا عليك القران ". قال ابى الله سماني لك قال " الله سماك لي ". فجعل ابى يبكي. قال قتادة فانبيت انه قرا عليه {لم يكن الذين كفروا من اهل الكتاب}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4960
- Book Index
- 482
Grades
- -
