ஹதீஸ்கள்
#4931
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!)” எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தனது புற்றிó ருந்து) வெளிப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் புகுந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدة بن عبد الله، اخبرنا يحيى بن ادم، عن اسراييل، عن منصور، بهذا. وعن اسراييل، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، مثله. وتابعه اسود بن عامر عن اسراييل،. وقال حفص وابو معاوية وسليمان بن قرم عن الاعمش، عن ابراهيم، عن الاسود،. قال يحيى بن حماد اخبرنا ابو عوانة، عن مغيرة، عن ابراهيم، عن علقمة، عن عبد الله،. وقال ابن اسحاق عن عبد الرحمن بن الاسود، عن ابيه، عن عبد الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4931
- Book Index
- 451
Grades
- -
