ஹதீஸ்கள்
#4928
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
மூசா பின் அபீஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம்மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்பெறும்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கு ‘வஹீ’ அருளப்பெறும்போது அவசர அவசரமாக உமது நாவை அசைக்காதீர் என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம்மீது அருளப்பெறும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும். ‘‘அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்” எனும் (75:17ஆவது) வசனத்திற்கு ‘நாமே உமது நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்றுசேர்ப்போம். நீர் அதை ஓதும்படி செய்வோம்’ என்று பொருள். ‘‘நாம் இதை ஓதிவிட்டோமாயின்...” எனும் (75:18ஆவது) வசனத்திற்கு, ‘ஜிப்ரீல் மூலமாக உமக்கு என் வசனங்கள் அருளப்பட்டுவிடுமாயின்...’ என்று பொருள். ‘‘நீர் ஓதுவதைத் தொடர்வீராக! பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நமது பொறுப்பாகும்” எனும் (75:19ஆவது) வசனத்திற்கு, ‘உம்முடைய நாவினால் பிறருக்கு விளக்கிக் கொடுக்கச் செய்வதும் எமது பொறுப்பேயாகும்’ என்று பொருள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4928
- Book Index
- 448
Grades
- -