ஹதீஸ்கள்
#4922
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார், ‘‘போர்த்தியிருப்பவரே!” (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம்என்றார்கள். நான், ‘‘(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுக!” (இக்ரஉ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள்? என்றேன். அதற்கு அபூசலமா அவர்கள், ‘‘நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப் பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காணவில்லை. எனக்கு முன்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. எனக்குப் பின்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. ஆகவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன்.2 ஆகவே, நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என்மீது ஊற்றுங்கள்!” என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும்விட்டார்கள்; என்மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள். அப்போது, ‘‘போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!” எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4922
- Book Index
- 442
Grades
- -