ஹதீஸ்கள்
#4875
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது கூடாரமொன்றில் இருந்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த இறைநம்பிக்கையாளர்களை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையுடன் எழுந்து, ‘‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்” எனும் (54:45ஆவது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.8 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4875
- Book Index
- 396
Grades
- -