ஹதீஸ்கள்
#4830
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அருளாளன் அல்லாஹ்வின் அரியணையின் கால்களில் ஒன்றைப் பற்றி(க்கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘‘என்ன?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்” என்று கூறியது. ‘‘உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்துகொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகின்றவரை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, ‘‘ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ் ‘‘இது (அவ்வாறுதான்) நடக்கும்” என்று கூறினான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக்கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا خالد بن مخلد، حدثنا سليمان، قال حدثني معاوية بن ابي مزرد، عن سعيد بن يسار، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " خلق الله الخلق، فلما فرغ منه قامت الرحم فاخذت بحقو الرحمن فقال لها مه. قالت هذا مقام العايذ بك من القطيعة. قال الا ترضين ان اصل من وصلك واقطع من قطعك. قالت بلى يا رب. قال فذاك لك ". قال ابو هريرة اقرءوا ان شيتم {فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4830
- Book Index
- 351
Grades
- -
