ஹதீஸ்கள்
#4824
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை (நபியாக) அனுப்பி ‘‘(நபியே!) கூறிவிடுவீராக: இந்த (அழைப்பு)ப்பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்” என்று கூறினான். (36:86). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குக் குறைஷியர் மாறுசெய்ததைக் கண்டபோது ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது; அனைத்துப் பொருட்களையும் அழித்துவிட்டது. அவர்கள் (பசியால்) எலும்புகளையும் தோல்களையும் புசிக்க நேர்ந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘அவர்கள் தோல்களையும், செத்தவற்றையும் சாப்பிட்டனர்” என்று கூறினார். (அப்போது) பூமியிலிருந்து புகையின் தோற்றத்தைப்போல் வெளியேறத் தொடங்கியது. அப்போது அபூ சுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘முஹம்மதே! உம் சமுதாயத்தார் அழிந்துவிட்டனர். அவர்களைவிட்டு (பஞ்சம்) விலகப் பிரார்த்தனை புரியுங்கள்!” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (பஞ்சமும் அகன்றது.) பிறகு ‘‘இதற்குப்பின் நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிவிடுவீர்கள்” என்று சொன்னார்கள். மன்ஸூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக!” என்று தொடங்கி ‘‘திரும்பச் செல்கிறீர்கள்” என்று முடியும் (44:10-15) வசனங்களை ஓதினார்கள்” என்றும், ‘‘(அவர்களைவிட்டு) மறுமையின் வேதனை அகற்றப்படுமா என்ன? புகை, பலமான பிடி, வேதனை ஆகியன நடந்து முடிந்துவிட்டன” என்றும் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவர் சந்திரன் பிளந்தது பற்றியும், இன்னொருவர் (கிழக்கு) ரோமர்கள் (தோற்கடிக்கப்பட்டு, பிறகு வென்றது) குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا بشر بن خالد، اخبرنا محمد، عن شعبة، عن سليمان، ومنصور، عن ابي الضحى، عن مسروق، قال قال عبد الله ان الله بعث محمدا صلى الله عليه وسلم وقال {قل ما اسالكم عليه من اجر وما انا من المتكلفين} فان رسول الله صلى الله عليه وسلم لما راى قريشا استعصوا عليه فقال " اللهم اعني عليهم بسبع كسبع يوسف ". فاخذتهم السنة حتى حصت كل شىء حتى اكلوا العظام والجلود فقال احدهم حتى اكلوا الجلود والميتة وجعل يخرج من الارض كهيية الدخان فاتاه ابو سفيان فقال اى محمد ان قومك قد هلكوا فادع الله ان يكشف عنهم فدعا ثم قال " تعودوا بعد هذا ". في حديث منصور ثم قرا {فارتقب يوم تاتي السماء بدخان مبين} الى {عايدون} ايكشف عذاب الاخرة فقد مضى الدخان والبطشة واللزام وقال احدهم القمر وقال الاخر الروم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4824
- Book Index
- 346
Grades
- -
