ஹதீஸ்கள்
#4822
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து (கேட்கப்படும்போது,) ‘‘அல்லாஹ்வே நன்கறிவான்” என்று கூறுவது அறிவின் பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரிடம் ‘‘(நபியே! அவர்களிடம்) நீர் கூறிவிடுக: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்” என்று கூறியுள்ளான். (38:86). குறைஷியர் நபி (ஸல்) அவர்களிடம் எல்லை மீறி நடந்து, மாறுசெய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. மக்கள் (பசிக்) கொடுமையால் எலும்புகளையும் செத்தவற்றையும் தின்றனர். அவர்களில் ஒருவர் பசி மயக்கத்தால், (கண் பஞ்சடைந்து) தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அவர்கள் ‘‘எங்கள் இறைவா! எங்களைவிட்டு இந்த வேதனையை நீக்கிடுவாயாக! நிச்சயமாக, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிடுகிறோம்” என்று கூறினர். (44:12) அப்போது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) ‘‘நாம் அவர்களைவிட்டுச் சற்று வேதனையை அகற்றிவிட்டால், அவர்கள் (பழைய இணைவைப்பு நிலைக்குத்) திரும்பச் சென்றுவிடுவர்” என்று கூறப்பட்டது. ஆனாலும், நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காகத்) தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், அவர்களைவிட்டு (தனது வேதனையை) அகற்றினான். உடனே அவர்கள் (பழைய இணைவைக்கும் நிலைக்கே) திரும்பச் சென்றனர். (சத்திய நெறியை ஏற்போம் என்று அவர்கள் செய்து கொடுத்த வாக்குறுதியை விட்டெறிந்தனர்.) ஆகவே, அல்லாஹ் பத்ர் போர் நாளில், அவர்களைப் பழிவாங்கினான். இதைத்தான், ‘‘(நபியே!) வெளிப் படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக!” என்று தொடங்கி, ‘‘நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்” என்று முடியும் (44:10-16) வசனங்கள் குறிப்பிடுகின்றன.4 அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا وكيع، عن الاعمش، عن ابي الضحى، عن مسروق، قال دخلت على عبد الله فقال ان من العلم ان تقول لما لا تعلم الله اعلم، ان الله قال لنبيه صلى الله عليه وسلم {قل ما اسالكم عليه من اجر وما انا من المتكلفين} ان قريشا لما غلبوا النبي صلى الله عليه وسلم واستعصوا عليه قال اللهم اعني عليهم بسبع كسبع يوسف فاخذتهم سنة اكلوا فيها العظام والميتة من الجهد حتى جعل احدهم يرى ما بينه وبين السماء كهيية الدخان من الجوع قالوا  ربنا اكشف عنا العذاب انا مومنون  فقيل له ان كشفنا عنهم عادوا فدعا ربه فكشف عنهم فعادوا فانتقم الله منهم يوم بدر فذلك قوله تعالى  فارتقب يوم تاتي السماء بدخان مبين الى قوله جل ذكره انا منتقمون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4822
- Book Index
- 344
Grades
- -
