ஹதீஸ்கள்
#4819
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
யஅலா பின் உமைய்யா அத்தமீமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, ‘‘ ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்கள் இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!’ என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள்” எனும் (43:77ஆவது) வசனத்தை ஓதக் கேட்டேன்.2 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (43:56ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘மஸலன் லில் ஆகிரீன்’ எனும் சொற்றொடருக்கு ‘பிற்கால மக்களுக்கு அறிவுரையாக (ஆக்கினோம்)’ என்று பொருள். கத்தாதா (ரஹ்) அல்லாதோர் கூறியதாவது: (43:13ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘முக்ரினீன்’ எனும் சொல்லுக்கு ‘கட்டுப்படுத்தக்கூடியவர்கள்’ என்று பொருள். ‘இன்னார் இன்னாரைக் கட்டுப்படுத்தக்கூடியவர்’ என்பதைக் குறிக்க ‘முக்ரின்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு. (43:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாப்’ எனும் சொல்லுக்கு ‘கைப் பிடிகள் இல்லாத கோப்பைகள்’ என்பது பொருள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (43:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்முல் கிதாப்’ என்பதற்கு ‘மொத்த ஏடு - மூல ஏடு’ என்பது பொருள். (43:81ஆவது வசனத்தின் பொருளாவது:) ரஹ்மானுக்குக் குழந்தை இல்லை; (அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால்) கடுமையாக எதிர்ப்பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். ‘ரஜுலுன் ஆபிதுன்’ எனும் சொல்லுக்கும், ‘ரஜுலுன் அபிதுன்’ எனும் சொல்லுக்கும் ‘வழிபடும் மனிதன்’ என்றே பொருள். (வ கீலிஹீ யா ரப்பீ எனும் 43:88ஆவது வசனத்தை) ‘வ காலர் ரஸூலு யா ரப்பீ’ என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள்.3 ‘‘அபித, யஅபது எனும் வினைச் சொற்கள் வழியாக வரும் (ஆபித் எனும் வினையாலணையும் பெயரின் பன்மையான) ‘ஆபிதீன்’ என்பதற்கு ‘மறுக்கக் கூடியவர்கள்’ எனப் பொருள்” என்றும் கூறப்படுகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4819
- Book Index
- 341
Grades
- -