ஹதீஸ்கள்
#4818
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர” எனும் (42:23ஆவது) வசனத்தொடர் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ‘‘(இந்த வசனத்திலுள்ள) ‘உறவினர்கள்’ என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் உறவினர்களை (பனூ ஹாஷிமை)க் குறிக்கும்” என்று கூறினார்கள். உடனே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவசரப்பட்டுவிட்டீர்; குறைஷி குலத்தின் எல்லாக் கிளை’னருக்கும் நபி (ஸல்) அவர்களுடன் உறவுமுறை இருக்கத்தான் செய்தது” என்று கூறிவிட்டு, ‘‘நபி (ஸல்) அவர்கள், (குறைஷியரின் அனைத்துக் கிளை’னரையும் நோக்கி) குறைந்தபட்சம் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள உறவு முறையைப் பேணி (நல்ல முறையில்) நடந்துகொள்ள வேண்டுமென்றே பெரிதும் நான் விரும்புகிறேன் என்று சொன்னார்கள்” என விளக்கமளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن عبد الملك بن ميسرة، قال سمعت طاوسا، عن ابن عباس رضى الله عنهما . انه سيل عن قوله {الا المودة في القربى} فقال سعيد بن جبير قربى ال محمد صلى الله عليه وسلم فقال ابن عباس عجلت ان النبي صلى الله عليه وسلم لم يكن بطن من قريش الا كان له فيهم قرابة فقال الا ان تصلوا ما بيني وبينكم من القرابة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4818
- Book Index
- 340
Grades
- -
