ஹதீஸ்கள்
#4816
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இந்த (41:22ஆவது) வசனம் குறித்துக் கூறியதாவது: (ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷி குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்’ (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்துகொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘‘நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். அவர்களில் ஒருவர், ‘‘(நம் பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்” என்று பதிலளித்தார். மற்றொருவர் ‘‘நம் பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக்கொண்டி ருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்” என்று கூறினார். அப்போதுதான், ‘‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களி óருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் இந்த வசனம் (41:22) அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا الصلت بن محمد، حدثنا يزيد بن زريع، عن روح بن القاسم، عن منصور، عن مجاهد، عن ابي معمر، عن ابن مسعود، {وما كنتم تستترون ان يشهد، عليكم سمعكم} الاية كان رجلان من قريش وختن لهما من ثقيف، او رجلان من ثقيف وختن لهما من قريش في بيت فقال بعضهم لبعض اترون ان الله يسمع حديثنا قال بعضهم يسمع بعضه. وقال بعضهم لين كان يسمع بعضه لقد يسمع كله. فانزلت {وما كنتم تستترون ان يشهد عليكم سمعكم ولا ابصاركم} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4816
- Book Index
- 338
Grades
- -
