ஹதீஸ்கள்
#4798
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (தங்கள்மீது) சலாம் கூறும் முறை. (தொழுகையில் ஓதப்படும் ‘அத்தஹிய்யாத்’ மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்கள்மீது நாங்கள் ‘ஸலவாத்’ சொல்வது எப்படி?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம; வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம” என்று சொல்லுங்கள்” என்றார்கள்.20 மற்றோர் அறிவிப்பில், ‘கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம’ (இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ வளத்தை வழங்கியதைப் போன்று) என்று காணப்படுகிறது. ... யஸீத் பின் ஹாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: ‘‘கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம” (என்று சொல்லுங்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) இந்த ஹதீஸ் மொத்தம் நான்கு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4798
- Book Index
- 320
Grades
- -