ஹதீஸ்கள்
#4785
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.7 என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: ‘‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப்போவதில்லை என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக” என்று தொடங்கும் (33:28, 29) இரு வசனங்களை முழுமையாகச் சொன்னார்கள். அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை இல்லத்தையுமே விரும்புகிறேன்” என்று நபியவர்களிடம் சொன்னேன்.8 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4785
- Book Index
- 307
Grades
- -