ஹதீஸ்கள்
#4762
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
காசிம் பின் அபீபஸ்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்பு உண்டா?” என்று கேட்டுவிட்டு, ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை...” எனும் (25:68ஆவது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதைக் கேட்ட சயீத் (ரஹ்) அவர்கள், ‘‘இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியதைப் போன்றே நானும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், ‘‘இது (25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற ‘அந்நிசா’ அத்தியாயத்திலுள்ள ஒரு வசனம் (4:93) மாற்றிவிட்டது” என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني القاسم بن ابي بزة، انه سال سعيد بن جبير هل لمن قتل مومنا متعمدا من توبة فقرات عليه {ولا يقتلون النفس التي حرم الله الا بالحق}. فقال سعيد قراتها على ابن عباس كما قراتها على. فقال هذه مكية نسختها اية مدنية، التي في سورة النساء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4762
- Book Index
- 284
Grades
- -
