ஹதீஸ்கள்
#4757
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தொடர்பாக அவதூறு பேசப் பட்டபோது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிவிட்டு, ‘‘என் மனைவியின் மீது அபாண்டப்பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்” என்று சொன்னார்கள். உடனே சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். ‘கஸ்ரஜ்’ குலத்தாரிடையேயிருந்து ஒரு மனிதர் எழுந்து, ‘‘பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்” என்று சொன்னார். -ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களு டைய தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.- (அவர்களிடையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றிவிட்டதென்றால்) ‘அவ்ஸ்’ குலத்தாருக்கும் ‘கஸ்ரஜ்’ குலத்தாருக்கும் இடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும் கைகலப்பும் மூண்டுவிடப் பார்த்தது. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது. அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரது கால் (அவரது கம்பளி அங்கியால்) இடறியது. அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மௌனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன். பின்னர், மூன்றாம் முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான் அவரை அதட்டினேன். அவர் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன்” என்று சொன்னார். நான், ‘‘எனது எந்த விஷயத்திற்காக?” என்று கேட்டேன். அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், ‘‘இப்படியா நடந்தது?” என்று கேட்டேன். அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)” என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பதுகூட எனக்கு நினைவில்லாதது போலாகிவிட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில் விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவுக்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை! அப்போது அவர்கள் ‘‘என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன்மீது (பெரிதாக்கிக்கொள்ளாமல்) இலேசாக்கிக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பலபேர் இருக்க, அவர்கள் அவள்மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறைகூறுவதும் இயல்புதான்” என்று சென்னார்கள். எனக்கு ஏற்பட்ட அளவுக்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் ‘‘என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று கேட்டேன். தாயார் ‘ஆம்’ என்று சொன்னார். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு...?” என்று கேட்டேன். ‘ஆம்’ அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டின் மேல் தளத்தில் ஓதிக்கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள். என் தாயாரிடம் ‘‘இவள் விஷயம் என்ன?” என்று கேட்டார்கள். என் தாயார், ‘‘அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது” என்று சொன்னார். உடனே அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், ‘‘என் அன்பு மகளே! நீ உன் வீட்டிற்கே திரும்பிச் செல்ல வேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் ‘‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து ‘அவர்கள் பிசைந்து வைத்த மாவை’ அல்லது ‘அவர்கள் குழைத்து வைத்த மாவை’த் தின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடம்) அறியவில்லை” என்று சொல்லியிருந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!” என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமறுவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்” என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் ‘‘அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அந்நியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!” என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைந்தார்.11 என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப் பக்கமும், (மற்றவர்) என் இடப் பக்கமும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘‘ஆயிஷா! நீ ‘தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்’ அல்லது ‘அநீதியிழைத்திருந்தால்’, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்” என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான், (நபி (ஸல்) அவர்களிடம்,) ‘‘இந்தப் பெண் வெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?” என்று கேட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் ‘‘நான் என்ன பதில் சொல்வது?” என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்!” என்றேன். அவர்கள், ‘‘நான் என்ன சொல்வேன்?” என்று கேட்டார்கள். அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனது தகுதிக்கேற்ப அவனைப் போற்றிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான்- அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் -நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான்- ‘‘தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டாள்” என்று நீங்கள் சொல்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக நான் காண்கிறேன்” -அப்போது (யூசுஃப் அவர்களுடைய தந்தை) யஅகூப் (அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால் நினைவுக்கு வரவில்லை- ‘‘(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே நான் பாதுகாப்புக்கோருகிறேன்” என யஅகூப் (அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.12 அந்த நேரத்தில் அல்லாஹ்வின தூதர் (ஸல்) அவர்கள்மீது, (குர்ஆன் வசனங் கள்) அருளப்பெற்றன. ஆகவே, நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘வஹீ’ (‘வேத அறிவிப்பு’ அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக்கொண்டிருந்தார்கள். மேலும் ‘‘ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான்” என்று சொன்னார்கள். நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் ‘‘நீ எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்!” என்று கூறினர். அதற்கு, ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என்மீதான) அவதூற்றைக் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை” என்று சொன்னேன். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்குபெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே சொன்னார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறு பேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்துபோனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் பின் ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும்கூட. (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘மிஸ்தஹுக்கு பயன்தரும் எந்த உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ், ‘‘உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனுமாய் இருக்கின்றான்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான். (இந்த வசனத்தில்) ‘உலுல் ஃபள்ல்’ (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். ‘மஸாக்கீன்’ (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறி, தாம் முன்பு செய்துவந்ததைப் போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்துவரத் தொடங்கினார்கள். அத்தியாயம் :
وقال ابو اسامة عن هشام بن عروة، قال اخبرني ابي، عن عايشة، قالت لما ذكر من شاني الذي ذكر وما علمت به قام رسول الله صلى الله عليه وسلم في خطيبا، فتشهد فحمد الله واثنى عليه بما هو اهله، ثم قال " اما بعد اشيروا على في اناس ابنوا اهلي، وايم الله ما علمت على اهلي من سوء، وابنوهم بمن والله ما علمت عليه من سوء قط، ولا يدخل بيتي قط الا وانا حاضر، ولا غبت في سفر الا غاب معي ". فقام سعد بن معاذ فقال ايذن لي يا رسول الله ان نضرب اعناقهم، وقام رجل من بني الخزرج، وكانت ام حسان بن ثابت من رهط ذلك الرجل، فقال كذبت، اما والله، ان لو كانوا من الاوس ما احببت ان تضرب اعناقهم. حتى كاد ان يكون بين الاوس والخزرج شر في المسجد، وما علمت فلما كان مساء ذلك اليوم خرجت لبعض حاجتي ومعي ام مسطح. فعثرت وقالت تعس مسطح. فقلت اى ام تسبين ابنك وسكتت ثم عثرت الثانية فقالت تعس مسطح، فقلت لها تسبين ابنك ثم عثرت الثالثة فقالت تعس مسطح. فانتهرتها، فقالت والله ما اسبه الا فيك. فقلت في اى شاني قالت فبقرت لي الحديث فقلت وقد كان هذا قالت نعم والله، فرجعت الى بيتي كان الذي خرجت له لا اجد منه قليلا ولا كثيرا، ووعكت فقلت لرسول الله صلى الله عليه وسلم ارسلني الى بيت ابي. فارسل معي الغلام، فدخلت الدار فوجدت ام رومان في السفل وابا بكر فوق البيت يقرا. فقالت امي ما جاء بك يا بنية فاخبرتها وذكرت لها الحديث، واذا هو لم يبلغ منها مثل ما بلغ مني، فقالت يا بنية خفضي عليك الشان، فانه والله، لقلما كانت امراة حسناء عند رجل يحبها، لها ضراير، الا حسدنها وقيل فيها. واذا هو لم يبلغ منها ما بلغ مني، قلت وقد علم به ابي قالت نعم. قلت ورسول الله صلى الله عليه وسلم قالت نعم ورسول الله صلى الله عليه وسلم واستعبرت وبكيت، فسمع ابو بكر صوتي وهو فوق البيت يقرا، فنزل فقال لامي ما شانها قالت بلغها الذي ذكر من شانها. ففاضت عيناه، قال اقسمت عليك اى بنية الا رجعت الى بيتك، فرجعت ولقد جاء رسول الله صلى الله عليه وسلم بيتي، فسال عني خادمتي فقالت لا والله ما علمت عليها عيبا الا انها كانت ترقد حتى تدخل الشاة فتاكل خميرها او عجينها. وانتهرها بعض اصحابه فقال اصدقي رسول الله صلى الله عليه وسلم حتى اسقطوا لها به فقالت سبحان الله، والله ما علمت عليها الا ما يعلم الصايغ على تبر الذهب الاحمر. وبلغ الامر الى ذلك الرجل الذي قيل له، فقال سبحان الله والله ما كشفت كنف انثى قط. قالت عايشة فقتل شهيدا في سبيل الله. قالت واصبح ابواى عندي، فلم يزالا حتى دخل على رسول الله صلى الله عليه وسلم وقد صلى العصر، ثم دخل وقد اكتنفني ابواى عن يميني وعن شمالي، فحمد الله واثنى عليه ثم قال " اما بعد يا عايشة، ان كنت قارفت سوءا او ظلمت، فتوبي الى الله، فان الله يقبل التوبة من عباده ". قالت وقد جاءت امراة من الانصار فهى جالسة بالباب فقلت الا تستحي من هذه المراة ان تذكر شييا. فوعظ رسول الله صلى الله عليه وسلم فالتفت الى ابي فقلت اجبه. قال فماذا اقول فالتفت الى امي فقلت اجيبيه. فقالت اقول ماذا فلما لم يجيباه تشهدت فحمدت الله واثنيت عليه بما هو اهله، ثم قلت اما بعد فوالله لين قلت لكم اني لم افعل. والله عز وجل يشهد اني لصادقة، ما ذاك بنافعي عندكم، لقد تكلمتم به واشربته قلوبكم، وان قلت اني فعلت. والله يعلم اني لم افعل، لتقولن قد باءت به على نفسها، واني والله ما اجد لي ولكم مثلا والتمست اسم يعقوب فلم اقدر عليه الا ابا يوسف حين قال {فصبر جميل والله المستعان على ما تصفون} وانزل على رسول الله صلى الله عليه وسلم من ساعته فسكتنا، فرفع عنه واني لاتبين السرور في وجهه وهو يمسح جبينه ويقول " ابشري يا عايشة، فقد انزل الله براءتك ". قالت وكنت اشد ما كنت غضبا فقال لي ابواى قومي اليه. فقلت والله لا اقوم اليه، ولا احمده ولا احمدكما، ولكن احمد الله الذي انزل براءتي، لقد سمعتموه، فما انكرتموه ولا غيرتموه، وكانت عايشة تقول اما زينب ابنة جحش فعصمها الله بدينها، فلم تقل الا خيرا، واما اختها حمنة فهلكت فيمن هلك، وكان الذي يتكلم فيه مسطح وحسان بن ثابت والمنافق عبد الله بن ابى، وهو الذي كان يستوشيه ويجمعه، وهو الذي تولى كبره منهم هو وحمنة قالت فحلف ابو بكر ان لا ينفع مسطحا بنافعة ابدا، فانزل الله عز وجل {ولا ياتل اولو الفضل منكم} الى اخر الاية يعني ابا بكر vوالسعة ان يوتوا اولي القربى والمساكين} يعني مسطحا الى قوله {الا تحبون ان يغفر الله لكم والله غفور رحيم} حتى قال ابو بكر بلى والله يا ربنا انا لنحب ان تغفر لنا، وعاد له بما كان يصنع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4757
- Book Index
- 279
Grades
- -
