ஹதீஸ்கள்
#4756
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) வந்து, ‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்” என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘(ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே!” என்று சொன்னார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகின்றீர்களா? அல்லாஹ்வோ ‘இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர் களுக்குப் பெரும் வேதனை உண்டு’ என்று (24:11ஆவது வசனத்தில்) கூறுகின்றானே!” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘குருடாவதைவிடப் பெரிய தண்டனை வேறேது?” என்று கேட்டுவிட்டு, ‘‘அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சார்பாக (அவர்கள்மீது வசைக்கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்துவந்தார்” என்று சொன்னார்கள்.10 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا ابن ابي عدي، انبانا شعبة، عن الاعمش، عن ابي الضحى، عن مسروق، قال دخل حسان بن ثابت على عايشة فشبب وقال حصان رزان ما تزن بريبة وتصبح غرثى من لحوم الغوافل قالت لست كذاك. قلت تدعين مثل هذا يدخل عليك وقد انزل الله {والذي تولى كبره منهم} فقالت واى عذاب اشد من العمى وقالت وقد كان يرد عن رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4756
- Book Index
- 278
Grades
- -
