ஹதீஸ்கள்
#4755
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் ‘‘(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக்கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?” என்று கூறினார்கள். ‘‘ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (இறுதிக் காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்” என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்” என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து கவிதை) பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நீங்கள் (அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தான் நீங்கள்)” என்று கூறி னார்கள்.9 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن الاعمش، عن ابي الضحى، عن مسروق، عن عايشة رضى الله عنها قالت جاء حسان بن ثابت يستاذن عليها قلت اتاذنين لهذا قالت اوليس قد اصابه عذاب عظيم. قال سفيان تعني ذهاب بصره. فقال حصان رزان ما تزن بريبة وتصبح غرثى من لحوم الغوافل قالت لكن انت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4755
- Book Index
- 277
Grades
- -
