ஹதீஸ்கள்
#4753
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் இறப்ப தற்குமுன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘என்னை அவர் புகழ்ந்து பேசிவிடுவாரோ என அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது ‘‘(வந்திருப்பவர்) நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும் முஸ்லிம் களில் முக்கியமானவரும் ஆவார்” என்று சொல்லப்பட்டது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள்” என்று சொன்னார்கள். (அன்னார் உள்ளே வந்ததும்,) ‘‘உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனேயிருப்பேன்” என்று பதிலளித் தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாவீர்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணம் புரியவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று” என்று (புகழ்ந்து) சொன்னார்கள். (அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى، عن عمر بن سعيد بن ابي حسين، قال حدثني ابن ابي مليكة، قال استاذن ابن عباس قبل موتها على عايشة، وهى مغلوبة قالت اخشى ان يثني على. فقيل ابن عم رسول الله صلى الله عليه وسلم ومن وجوه المسلمين. قالت ايذنوا له. فقال كيف تجدينك قالت بخير ان اتقيت. قال فانت بخير ان شاء الله زوجة رسول الله صلى الله عليه وسلم ولم ينكح بكرا غيرك، ونزل عذرك من السماء. ودخل ابن الزبير خلافه فقالت دخل ابن عباس فاثنى على ووددت اني كنت نسيا منسيا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4753
- Book Index
- 275
Grades
- -
