ஹதீஸ்கள்
#4738
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது ‘‘உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள்தானே!” என்று மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம் (அலை) அவர்கள் ‘‘மூசா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள்தானே? என்னைப் படைப்பதற்கு முன்பே என்மீது அல்லாஹ் ‘எழுதிவிட்ட அல்லது விதித்துவிட்ட’ ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா (அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்” என்று சொன்னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا ايوب بن النجار، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " حاج موسى ادم، فقال له انت الذي اخرجت الناس من الجنة بذنبك واشقيتهم. قال قال ادم يا موسى انت الذي اصطفاك الله برسالته وبكلامه اتلومني على امر كتبه الله على قبل ان يخلقني او قدره على قبل ان يخلقني ". قال رسول الله صلى الله عليه وسلم " فحج ادم موسى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4738
- Book Index
- 260
Grades
- -
