ஹதீஸ்கள்
#4734
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. நான் திருப்பித் தரும்படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர் ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனக்குத் தரமாட்டேன்” என்று சொன்னார். நான் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ மறுமையில் உயிரூட்டப்பட்டு எழுப்பப்படும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” என்றேன். அவர், ‘‘அப்படியாயின், நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு! பின்பு மறுமையில், எனக்குச் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படும். அப்போது நான் உனது கடனைச் செலுத்துவேன்” என்று சொன்னார். அப்போதுதான் ‘‘நம் வசனங்களை மறுத்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? எனும் (19:77, 78ஆவது) வசனங்கள் இறங்கின. அத்தியாயம் :
حدثنا بشر بن خالد، حدثنا محمد بن جعفر، عن شعبة، عن سليمان، سمعت ابا الضحى، يحدث عن مسروق، عن خباب، قال كنت قينا في الجاهلية، وكان لي دين على العاصي بن وايل قال فاتاه يتقاضاه، فقال لا اعطيك حتى تكفر بمحمد فقال والله لا اكفر حتى يميتك الله ثم تبعث. قال فذرني حتى اموت ثم ابعث، فسوف اوتى مالا وولدا، فاقضيك فنزلت هذه الاية {افرايت الذي كفر باياتنا وقال لاوتين مالا وولدا}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4734
- Book Index
- 256
Grades
- -
