ஹதீஸ்கள்
#4733
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மக்காவில் (அறியாமைக் காலத் தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். அப்போது ‘ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவருக்கு வாள் ஒன்றைச் செய்து கொடுத்தேன். பின்னர் அதற்கான கூலியைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை உனக்குத் தரமாட்டேன்” என்று சொன்னார். நான், ‘‘உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு உயிர்கொடுக்கும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் ‘‘என்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து பிறகு என்னை எழுப்பினால், அப்போதும் எனக்குச் செல்வமும் சந்ததியும் இருக்கும்” என்று சொன்னார். உடனே அல்லாஹ்: ‘‘நம் வசனங்களை மறுத்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா?” எனும் (19:77,78) வசனங்களை அருளினான். இந்த ஹதீஹ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘வாள்’ மற்றும் ‘அஹ்த்’ எனும் சொல்லுக்கான ‘உறுதிமொழி’ எனும் பொருள் ஆகியவை இடம் பெறவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4733
- Book Index
- 255
Grades
- -