ஹதீஸ்கள்
#4732
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவர்3 எனக்குத் தர வேண்டியிருந்த ஒரு கடனைக் கேட்டு அவரிடம் நான் சென்றேன். ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக்கொண்டு) இருக்கும்வரை, நான் உனக்குத் தரமாட்டேன்” என்று அவர் சொன்னார். நான், ‘‘நீ இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை நான் முஹம்மதை நிராகரிக்கமாட்டேன்” எனக் கூறினேன். அவர் ‘‘நான் இறந்து மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘‘அப்படியாயின், எனக்கு அங்கேயும் செல்வமும் சந்ததியும் கிடைக்கும். அப்போது உனக்குத் தரவேண்டிய கடனை நான் செலுத்திவிடுகிறேன்” என்று சொன்னார். அப்போதுதான் ‘‘(நபியே!) நம் வசனங்களை மறுத்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீர் பார்த்தீரா?” எனும் (19:77ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.4 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، عن الاعمش، عن ابي الضحى، عن مسروق، قال سمعت خبابا، قال جيت العاصي بن وايل السهمي اتقاضاه حقا لي عنده، فقال لا اعطيك حتى تكفر بمحمد فقلت لا حتى تموت ثم تبعث. قال واني لميت ثم مبعوث قلت نعم. قال ان لي هناك مالا وولدا فاقضيكه، فنزلت هذه الاية {افرايت الذي كفر باياتنا وقال لاوتين مالا وولدا} رواه الثوري وشعبة وحفص وابو معاوية ووكيع عن الاعمش
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4732
- Book Index
- 254
Grades
- -
