ஹதீஸ்கள்
#4731
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?” என்று கேட்டார்கள்.2 அப்போதுதான் ‘‘(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا عمر بن ذر، قال سمعت ابي، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لجبريل " ما يمنعك ان تزورنا اكثر مما تزورنا فنزلت {وما نتنزل الا بامر ربك له ما بين ايدينا وما خلفنا}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4731
- Book Index
- 253
Grades
- -
