ஹதீஸ்கள்
#4730
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அறிவிப்புச் செய்பவர், ‘‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள், ‘‘ஆம்! இதுதான் மரணம்” என்று பதிலளிப் பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: ‘நரகவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் ‘‘இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள், ‘‘ஆம் (அறிவோம்); இதுதான் மரணம்” என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், ‘‘சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை” என்று கூறுவார். இதை அறிவித்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீர் அவர்களை எச்சரிப்பீராக! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். ஆதலால் இவர்கள் நம்பிக்கை கொள்ளவேமாட்டார்கள்” எனும் (19:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், ‘‘இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அலட்சியமாக உள்ளனர். ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4730
- Book Index
- 252
Grades
- -