ஹதீஸ்கள்
#4728
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சஅத் பின் அபீ வக்காஸ்) அவர்களிடம் ‘‘இந்த (18:103ஆவது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், ‘ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன்.10 அதற்கு அவர்கள், ‘‘(ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறித்தவர்களும்தான் அவர்கள். யூதர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறித்தவர் களோ சொர்க்கத்தை நிராகரித்தார்கள்; அங்கு உணவோ பானமோ கிடையாது என்று சொன்னார்கள்.11 ‘ஹரூரிய்யாக்களோ’, அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அவனுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள்” என்று சொன்னார்கள். (என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்களை ‘பாவிகள்’ என்று குறிப்பிட்டுவந்தார்கள். (‘இறைமறுப்பாளர்கள்’ என்று கூறுவதில்லை.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4728
- Book Index
- 250
Grades
- -