ஹதீஸ்கள்
#4724
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும், ஃபாத்திமாவிடமும் இரவு நேரத்தில் வந்து, ‘‘நீங்கள் இருவரும் (‘தஹஜ்ஜுத்’) தொழவில்லையா?” என்று கேட்டார்கள்.2 (18:22ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ரஜ்மம் பில்ஃகைப்’ (மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டவர்களைப்போல்) என்பதன் கருத்தாவது: (குகைவாசிகள் எத்தனை பேர் என்பது பற்றிய உண்மை நிலை) அவர்களுக்குத் தெளிவாக வில்லை. (18:28ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபுருத்’ எனும் சொல்லுக்கு ‘கவலைக்குரியது’ என்பது பொருள். (18:29ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘சுராதிக்’ எனும் சொல்லுக்கு ‘(நரகத்தின் ஜுவாலை) கூடாரங்களையும், கூடாரங்களால் சூழப்பட்ட அறையையும் போல (அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்)’ என்று பொருள். (18:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹாவிருஹு’ (அவனிடம் பேசிக்கொண்டிருக்கின்றான்) எனும் சொல் ‘முஹாவரா’ (உரையாடல்) எனும் வேர்ச்சொல்லிருந்து பிறந்ததாகும். (18:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாகின்ன ஹுவல்லாஹு ரப்பீ’ எனும் தொடருக்கு ‘லாகின் அன ஹுவல்லாஹு ரப்பீ’ (நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னைப் படைத்துப் பராமரிப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன்) என்று பொருள். (18:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிலாலஹுமா எனும் சொல்லுக்கு ‘அவ்விரண்டுக்கும் இடையே’ என்று பொருள். (18:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸலக்’ எனும் சொல்லுக்கு ‘யாரும் காலூன்றி நிற்க முடியாத அளவுக்கு வழுவழுப்பானது’ என்று பொருள். (18:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வலாயா’ (அதிகாரம்) எனும் சொல், ‘அல்வல்யு’ எனும் வேர்ச்சொல்லிருந்து பிறந்ததாகும். (இதே வசனத்திலுள்ள) ‘உக்பன்’ எனும் சொல்லும் ஆகிபத், உக்பா, உக்பத் ஆகிய சொற்களும் ஒன்றாகும். இவற்றுக்கு ‘முடிவு’ என்பது பொருள். (18:55ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘குபுல்’ மற்றும் (இன்ன பிற ஓதல் முறைகளில் வந்துள்ள) கபல், கிபல் ஆகிய சொற்களுக்கு ‘(கண்) எதிரில்’ என்று பொருள். (18:56ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘லி யுத்ஹிளூ’ எனும் சொல்லுக்கு ‘வீழ்த்திவிடுவதற்காக’ என்று பொருள். (இச்சொல்) ‘வழுக்கிவிடுதல்’ எனும் பொருள் கொண்ட ‘தஹள்’ எனும் வேர்ச் சொல்லிலிருந்து வந்ததாகும். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا يعقوب بن ابراهيم بن سعد، حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، قال اخبرني علي بن حسين، ان حسين بن علي، اخبره عن علي رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم طرقه وفاطمة قال " الا تصليان ". {رجما بالغيب} لم يستبن. {فرطا} ندما {سرادقها} مثل السرادق، والحجرة التي تطيف بالفساطيط، {يحاوره} من المحاورة {لكنا هو الله ربي} اى لكن انا هو الله ربي ثم حذف الالف وادغم احدى النونين في الاخرى. {زلقا} لا يثبت فيه قدم. {هنالك الولاية} مصدر الولي. {عقبا} عاقبة وعقبى وعقبة واحد وهى الاخرة قبلا وقبلا وقبلا استينافا {ليدحضوا} ليزيلوا، الدحض الزلق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4724
- Book Index
- 246
Grades
- -
