ஹதீஸ்கள்
#4719
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகை அறிவிப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது, “இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சொர்க்கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அன்னாருக்குத் தந்தருள் வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் தகுதிக்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக!” என்று எவர் பிரார்த்திக் கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.16 அத்தியாயம் :
حدثنا علي بن عياش، حدثنا شعيب بن ابي حمزة، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القايمة، ات محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، حلت له شفاعتي يوم القيامة ". رواه حمزة بن عبد الله عن ابيه عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4719
- Book Index
- 241
Grades
- -
