ஹதீஸ்கள்
#4710
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ்வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) “ஹிஜ்ர்'எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்கலானேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், “இரவில் நான் பைத்துல் மக்திசிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். (அப்போது நான் “ஹிஜ்ர்' பகுதியில் நின்றிருந்தேன்.)” என்று (நபியவர்கள் கூறியதாகக்) கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (17:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “காஸிஃப்' எனும் சொல்லுக்கு “எல்லாவற்றையும் பிடுங்கி எறியும் பலத்த காற்று' என்பது பொருள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4710
- Book Index
- 232
Grades
- -